மேட்டூரிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் 2 நாளில் 2.26 அடி குறைந்தது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முடிவடைந்ததும், ஆண்டுதோறும் ஜனவரி 28ஆம் தேதி அணையிலிருந்து பாசனத் தேவைக்காகத் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும். இதையடுத்து, குடிநீர்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இந்த நிலையில், நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முடிந்த நிலையில், அணையிலிருந்து புதன்கிழமை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 324 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டதால், புதன்கிழமை 33.99 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், வியாழக்கிழமை 32.91 அடியாகவும், வெள்ளிக்கிழமை 31.73 அடியாகவும் குறைந்தது.
அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 2 நாள்களில் நீர்மட்டம் 2.26 அடி குறைந்தது. தற்போது அணையின் நீர் இருப்பு 8.23 டிஎம்சியாக உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

